Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஊத்தங்கரை அருகே குடிபோதையில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 60 வயது முதியவர் பலி

ஊத்தங்கரை அருகே குடிபோதையில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 60 வயது முதியவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கே.பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் (60). இவரது அத்தை பேரன் கே பாப்பாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன் (32). இவர்கள் இருவரும் நேற்று இரவு குடிபோதையில் முன் விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் பன்னீர், மகேந்திரனின் ஸ்கூட்டியின் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டதாகவும் அதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன், பன்னீரின் தலையில் கல்லை கொண்டு அடித்ததாகவும் கூறப்படுகிறது இதில் பன்னீருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த பன்னீரை சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வரும் வழியிலேயே உயிரிழந்தார். இக் கொலைக்கு காரணமான மகேந்திரன் உடனடியாக தலைமறைவாகியுள்ளார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளியை போலீசார் தேடி வருகின்றன.


இச்சம்பவம் குறித்து சாம்பல்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இறந்த பன்னீரின் உடல் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *