Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி உறுதிமொழி ஏற்பு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி உறுதிமொழி ஏற்பு

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.


தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் தூய்மைப்பணி மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொ) வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் கவிதா ஆகியோர்  தலைமையில் தூய்மைப் பணி குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர், தூய்மைப் பணி நடந்தது.

இதில், ஈரோடு அரசு மருத்துவமனை வளாக பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் முழுவீச்சில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *