Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கிருஷ்ணகிரியில்  எச்.ஐ.வி போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி

கிருஷ்ணகிரியில் எச்.ஐ.வி போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து மாரத்தான் போட்டி

கிருஷ்ணகிரியில் 

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு துறை மற்றும்   உலக இளைஞர் திருவிழா  கொண்டாடும் விதமாக 

 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 

மாரத்தான் போட்டி தொடங்கப்பட்டது. இப்போட்டியை வருவாய் கோட்டாட்சியர் பாபு கொடி  அசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் அரசு ஆண்கள் கலை கல்லூரி, பெண்கள் கலை கல்லூரி, அறிஞர் அண்ணா, வித்யா மந்திர், கொன்சகா, புனித வள்ளலார் உள்ளிட்ட கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்  கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டு தாலுகா அலுவலகம், ரவுண்டானா வழியாக  சென்று  மாவட்ட விளையாட்டு மைதானம் வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் அருள், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஸ்குமார்  உள்ளிட்டார் கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *