Wednesday, October 16
Breaking News:
Breaking News:
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 16 ஆம் நாள் நினைவு அஞ்சலி

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 16 ஆம் நாள் நினைவு அஞ்சலி

மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 16 ஆம் நாள் நினைவு அஞ்சலி முன்னிட்டு படம் திறப்பு மகளிர் அணியினர் கண்ணீர் மல்க கதறி அழுது அஞ்சலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவு பதினாறாம் நாள் நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் தேமுதிக காஞ்சி மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் பேருந்து நிலையம் அருகே பட திறப்பு நிகழ்ச்சியும் அங்கு இருந்து தேரடி தெரு வரை தேமுதிக தொண்டர்கள் மௌவுன ஊர்வலமாக வந்து மௌன அஞ்சலி செலுத்தினர் 

கேப்டன் அவர்களுக்கு மகளிர் அணியினர் அஞ்சலி செலுத்தும் போது கண்ணீர் மல்க கதறி அழுது அஞ்சலி செலுத்தினர் 

இது அங்கு உள்ளவர்கள் இடையே பெரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

 இசைக்கலைஞர்கள் கேப்டன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி கச்சேரி நடத்தி அஞ்சலி செலுத்தின

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *