Wednesday, October 16
Breaking News:
Breaking News:
பிரஷ் பயன்படுத்தாமல் "பேப்பர் ராக்கெட்"டை தூரிகையாகக் கொண்டு சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் படத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்த ஓவிய ஆசிரியர்!

பிரஷ் பயன்படுத்தாமல் "பேப்பர் ராக்கெட்"டை தூரிகையாகக் கொண்டு சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீர முத்துவேல் படத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்த ஓவிய ஆசிரியர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் வெற்றிகரமாக நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3, இதற்காக பாடுபட்ட சந்திராயன்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்  அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக பிரஷ் ஏதும் பயன்படுத்தாமல் "பேப்பர் ராக்கெட்டை" தூரிகையாக்கி வீர முத்துவேல் ஓவியத்தை வரைந்தார்.இந்த ஓவியத்தை  பார்த்த பொதுமக்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்களும், விஞ்ஞானி வீரமுத்துவேல் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்தனர். திருக்கோவிலூர் தாலுகா செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *