Wednesday, October 16
Breaking News:
Breaking News:
மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் 

N.கேசவலு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


 பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தலைமை ஆசிரியர்  பொன்னாடை போர்த்தி பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தார்.


 மேலும் 2023-24 ஆம் கல்வியாண்டில் ஓய்வு பெற இருக்கும் முதுகலை ஆசிரியர்கள் திரு S.ராஜன் மற்றும் திருமதி G.வசந்தா ஆகியோர் செய்த கல்வி பணியினை பாராட்டும் விதமாக பொன்னாடை போர்த்தி சந்தன மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்முன்னதாக

ஆசிரியராக பணிபுரிந்த

 முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள் சிறப்பினை போற்றும் விதமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உரையாற்றினர்.


 இறுதியாக ஆசிரியர் தின விழா சிறப்புகளை பற்றி  தலைமை ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.


நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டுப்பண் முழங்க விழாவானது இனிதே நிறைவுற்றது.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *