Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், 29-வது ஆண்டு தொடக்க விழா! முதியோர் இல்லத்திற்கு மதிய‌ உணவு வழங்கிய, கட்சி நிர்வாகிகள்

திருநெல்வேலியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், 29-வது ஆண்டு தொடக்க விழா! முதியோர் இல்லத்திற்கு மதிய‌ உணவு வழங்கிய, கட்சி நிர்வாகிகள்

திருநெல்வேலியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின், 29-வது ஆண்டு தொடக்க விழா! முதியோர் இல்லத்திற்கு மதிய‌ உணவு வழங்கிய, கட்சி நிர்வாகிகள்! 

திருநெல்வேலி,ஆகஸ்ட்.27:-

தமிழக அரசியல் கட்சிகளுள் ஒன்றான, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டு, 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் 29-வது ஆண்டு தொடக்கவிழா, தமிழகமெங்கும் தற்போது  கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்  அடிப்படையில், த கட்சியின் தொடக்கவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதி த.மு.மு.க. சார்பில், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் செயல்பட்டு வரும், அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனமான, "ஜெயம்" முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கும், பணியாளர்களுக்கும், இன்று (ஆகஸ்ட்.27) நண்பகலில்  "மதிய உணவு"வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சிக்கு, மேலப்பாளையம் பகுதி தலைவர் எஸ்.எஸ். யூசுப் சுல்தான் தலைமை வகித்தார். 

செயலாளர் எ.ஆர். பாதுஷா,  பொருளாளர் அசன்மைதீன் ஆகியோர், முன்னிலை வகித்தனர். மதிய உணவு வழங்கும் பணியை, கட்சியின் 

மாவட்ட தலைவரும், நெல்லை மாநகராட்சி 50-வது வார்டு கவுன்சிலருமான கே.எஸ்.ரசூல்மைதீன்,   துவக்கி வைத்தார். 

மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன், மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில பொருளாளர் ரியாஸ்,‌ மாவட்ட துணை செயலாளர் அ.காஜா, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில துணை செயலாளர் காசிம் பிர்தவுஸி, மண்டல செயலாளர் நாமியா அசன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் குதா, வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் சேக் மதார், மனிதநேய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் நாகூர் மீரான் உள்ளிட்டோர், கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *