Wednesday, October 16
Breaking News:
Breaking News:
மோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலை

மோசமான நிலையில் உள்ள நெடுஞ்சாலை

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் தேவாலாவில் இருந்து கரியசோலை செல்லும் நெடுஞ்சாலை வாளவயல் பகுதியில் 4ஆண்டுகளுக்கு முன் பெய்த மிக அதிகமான கணமழையில் சாலையில் பள்ளம் ஏற்ப்பட்டது. உடனடியாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததும் நேரில் வந்து பார்வையிட்டு உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் ஆனால் இதுநாள் வரை இந்த சாலை சரிசெய்ய படவில்லை. தேவாலாவில் இருந்து வாளவயல் கரியசோலை நெலாக்கோட்டை செல்லகூடிய நெடுஞ்சாலை ஆகும்.இந்த சாலை முழுவதும் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது அவசர ஊர்திகள் சென்று வரகூட சரியான சாலை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இனியும் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நிர்வாகம் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *