Wednesday, October 16
Breaking News:
Breaking News:
வாழப்பாடி அருகே தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

வாழப்பாடி அருகே தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட இளைஞரணி மாவட்ட தலைவர் வாழப்பாடி குணா தலைமையில் கிழக்கு மாவட்ட பொது செயலாளர் எம்.கே.குமார் அயோத்தி ராமச்சந்திரன் ஆகியோரது முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் கே பி ராமலிங்கம் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் சண்முகநாதன், முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.


மாநில துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் கே.பி.ராமலிங்கம் சேஷன்சாவடி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். பின்பு அப்பகுதி துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதை தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து கட்சி நிர்வாகிகளோடு தூய்மை பணியில் ஈடுபட்டார். அதை எடுத்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த ரத்ததான முகாமினை துவங்கி வைத்து சிறப்பு உரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் பொன் பழனிச்சாமி, கிழக்கு மாவட்ட துணைத் தலைவர்கள் ராம பழனிவேல், சுந்தரமூர்த்தி, கிழக்கு மாவட்ட செயலாளர்கள் பிரபாகரன், வாழை வெங்கடேஷ், இளைஞர் அணியின் மாவட்டத் துணைத் தலைவர் மதன்குமார், இளைஞர் அணியின் வாழப்பாடி வடக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் தினேஷ் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் இந்த முகாமில் 50க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *