Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இந்துமுன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இந்துமுன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம்  சென்னிமலையில் உள்ள     முருகன் மலைக்கோவிலை

கிருஸ்துவ கல்வாரி மலை ஆக மாற்றுவோம் என்று கூறிய

கிறிஸ்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னிமலை பேருந்து நிலையம் முன்பு  இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில்  மாநில பொதுசெயலாளர் ஜே எஸ் கிஷோர் குமார் சிறப்புரை ஆற்றினார் இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக புலவர்  தமிழரசன் அவர்கள் விவசாயி தூரன் மஞ்சுநாத் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி  உரையாற்றினார்கள். மேலும் மாநில செயலாளர்கள் சி பி சண்முகம்,  சேவுகன் , மாநில நிர்வாக குழு  உறுப்பினர் சதீஷ், கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன் மாநில பேச்சாளர் சிங்கை பிரபாகரன் , ஈரோடு மாவட்ட தலைவர் பா ஜெகதீசன் ,ஒருங்கிணைப்பாளர் முருகன்,மற்றும் மாநில மாவட்ட ,ஒன்றிய , நகர் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர் .இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான முக்கிய நிகழ்வுகளாக கருதப்படுவது


''ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருங்கத்தொழுவு பஞ்சாயத்து கத்தக்கொடிக்காடு என்ற கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பசுவபட்டியில் இருந்து வந்து அர்ச்சுனன் (எ) ஜான்பீட்டர் என்பவர் இடம் வாங்கி அரசு அனுமதி பெறாமல் ஜெபக் கூட்டம் நடத்தி வந்தார்.

அக்கூட்டத்திற்கு வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்து மதப்பிரச்சாரம் செய்து வந்தார்.


 இப்பிரச்சாரத்தின் போது இந்து தெய்வங்களை இழிவு படுத்தியும்,  இந்துக்களின் பண்பாடு கலாச்சாரத்தை கொச்சைபடுத்தி வந்தார்.


இதை அறிந்த உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாமல் மதப்பிரச்சாரம் செய்து வந்தார்.


 இச்செயலை ஊர்மக்கள் மீண்டும் தட்டிக் கேட்க சென்ற போது ஊர் பொதுமக்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியும், பொய் வழக்குகள் போடப்பட்டது. கந்த சஷ்டி அரங்கேறிய சென்னிமலை முருகன் கோயிலை காப்பாற்றப்பட வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடும் பக்தியோடும் முருக பக்தர்கள் இந்து முன்னணி  அமைப்பினர் மற்றும் ஊர் மக்கள் திரளாக பங்கேற்று மாபெரும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக சென்னிமலை முருகன் கோயிலை கிறிஸ்தவ கல்வாரி மலை ஆக மாற்றும் என்று கூறிய கிறிஸ்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *