Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  அண்ணா பிறந்தநாளையொட்டி  , பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெற்ற சைக்கிள் போட்டி நடைபெற்றது.

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி , பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெற்ற சைக்கிள் போட்டி நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெற்ற சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.


 இதனை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் கொடியை அசைத்து துவக்கி வைத்தார். இந்த சைக்கிள் போட்டியானது மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வெங்ககல்பட்டி, திருச்சி பைபாஸ் சாலை, மணவாடி, கல்லுமடை வழியாக வெள்ளியணை வரை சென்று மீண்டும் கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு வருமாறு நடைபெற்றது. இந்த போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் சைக்கிள்களுடன் பங்கேற்றனர். இந்த போட்டியானது 13 14 15 மற்றும் 16 17 18 என வயது வித்தியாசத்துடன் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படும்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *