Wednesday, October 16
Breaking News:
Breaking News:
கஸ்பாகாரணை கிராஜுவேட்ஸ் அஸோஷியன்ஸ் சார்பாக வினா போட்டி

கஸ்பாகாரணை கிராஜுவேட்ஸ் அஸோஷியன்ஸ் சார்பாக வினா போட்டி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், கஸ்பாகாரணை கிராமத்தில் கிராஜுவேட்ஸ் அசோசியேஷன் 49/2023 சார்பாக மகாத்மா காந்தி 155-வது பிறந்த நாளை முன்னிட்டு வினாடி வினா போட்டி நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் பஞ்சன் செயலாளர் மகாவிஷ்ணு பொருளாளர் ஜோதி தலைமை வகித்தனர். 


துணைத் தலைவர் ஆறுமுகம்,துணை செயலாளர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் பிரபு, ஆலோசகர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.


இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவி மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 


இந்த போட்டி நான்கு சுற்றுகளாக நடைபெற்றது. இந்திய மற்றும் தமிழக அரசியல், நாட்டு நடப்பு, பொது அறிவு மற்றும் புத்திக்கூர்மை போன்ற கேள்விகளின் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது.


 இப்போட்டியில் முதல் ஆறு இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க தொகை வழங்கி ஊக்கம் அளிக்கப்ப்பட்டது. 


போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வாங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வெங்கடேசன், கந்தசாமி,சுரேஷ், ராமமூர்த்தி, ஜெகதீசன்,வடிவேல் ஆகியோர் அன்பளிப்பு வழங்கினர். 


இந்த வினாடி வினா போட்டி ஒவ்வொரு மாதமும் நடைபெறும் என்று ஜி ஏ கே தலைமை குழு நிர்வாகிகள் தெரிவித்தனர் .

இந்த போட்டியின் மூலம் மாணவ மாணவர்களின் போட்டிதிறனை வளர்க்க உதவும் என்று பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


நிகழ்ச்சியின் முடிவில் முத்துக்குமார் அவர்கள் நன்றியை தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் அருண்குமார்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *