Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலியில், சிவாஜிகணேசன் பிறந்த தினத்தை கொண்டாடிய, காங்கிரஸ் கட்சியினர்! முன்னாள் மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், சிவாஜிகணேசன் பிறந்த தினத்தை கொண்டாடிய, காங்கிரஸ் கட்சியினர்! முன்னாள் மத்திய இணை அமைச்சர் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.1:- தமிழ்த்திரை உலகில் கொடிகட்டிப் பறந்த,  புகழ்பெற்ற நடிகரான சிவாஜி கணேசனின், 95-வது பிறந்த தினம், இன்று (அக்டோபர்.1) தமிழகமெங்கும் அவருடைய ரசிகர்களாலும்,  காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களாலும், மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது, அதன் அடிப்படையில் திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டையில் உள்ள,  மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், சிவாஜிகணேசன் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கர பாண்டியன், தலைமை வகித்தார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் திருவுருவப்படத்திற்கு, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் இணை அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மலர் தூவியும்,மலர் மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தினார்.அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மாநகர பொருளாளர் ராஜேஷ் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், உதய குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் குறிச்சி கிருஷ்ணன், மகேந்திர பாண்டியன், மகிளா காங்கிரஸ் மாரியம்மாள், மெடில்டா உட்பட பலரும், மலர் தூவி மரியாதை செய்தனர். அதன் பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இம்மாதம் (அக்டோபர்) 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரவுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் நிகழ்ச்சிகள் குறித்து, விவாதிக்கப்பட்டது.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *