Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை யூனிவர்சல் மேல்நிலைப் பள்ளியில் இஸ்ரோ அறிவியல் கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை யூனிவர்சல் மேல்நிலைப் பள்ளியில் இஸ்ரோ அறிவியல் கண்காட்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தனியார் யுனிவர்சல் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெறும் இஸ்ரோ அறிவியல் கண்காட்சி வாகனத்தில் சந்திராயன் 3 மற்றும் மங்கள்யான் விண்கலம் விண்ணில் ஏவப்படும் ராக்கெட்கள் குறித்து பல்வேறு வகையான புகைப்படங்களை  இன்று காலை10 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார் அதனைத் தொடர்ந்து இஸ்ரோ அறிவியல் கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.


 யுனிவர்சல் பள்ளி மேலாளர் சிவப்பிரகாசம்


 யுனிவர்சல் பள்ளி தாளாளர் தீபா சிவப்பிரகாசம்

 முன்னிலையில் நடைபெற்றது.


 நிகழ்ச்சியில் இஸ்ரோ சயின்டிஸ்ட் சீனிவாசா பெங்களூர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்புராயன் தொடக்க கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாள் தனியார் பள்ளி அலுவலர் அமுதா தேன்மொழி

ஜோலார்பேட்டை நகர மன்ற ஆணையர் பழனி.

ஜோலார்பேட்டை மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆஜாம் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் திருப்பத்தூர் உட்பட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள்

இஸ்ரோ அறிவியல் கண்காட்சி வாகனத்தை பார்வையிட்டு வருகின்றனர்.


திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் பா. சிவக்குமார். வினாயகமூர்த்தி

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *