Wednesday, October 16
Breaking News:
Breaking News:
ராணிப்பேட்டை மாவட்டம் "பின்னாவரம்" கிராமத்தில் புதிய  அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி

ராணிப்பேட்டை மாவட்டம் "பின்னாவரம்" கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி

*நெமிலி ஊராட்சி ஒன்றியம்!*

*பின்னாவரம் ஊராட்சி!!*

*ரூ.37,00,000/- மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்!!...*


நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பின்னாவரம் ஊராட்சியில், 2022-2023ஆம் நிதியாண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்!...


1. பின்னாவரம் கிராமத்தில் புதிய *அங்கன்வாடி கட்டிடம்* கட்டும் பணி *ரூ.14,50,000/-*


2. பின்னாவரம் கிராமத்தில் புதிய *நெற்களம்* அமைக்கும் பணி *ரூ.8,00,000/-*


3. சேந்தமங்கலம் கிராமத்தில் புதிய *அங்கன்வாடி கட்டிடம்* கட்டும் பணி *ரூ.14,50,000/-*


மேற்காணும் பணிகளை மொத்தம் *ரூ.37 லட்சம் மதிப்பீட்டில், கட்டுவதற்கான பூமிபூஜை,* ஊராட்சி மன்றத் தலைவர் திரு.மணிவண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது!...


*நெமிலி ஒன்றிய பெருந்தலைவர், பெ.வடிவேலு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்!...*


இந்நிகழ்ச்சியில், ஒன்றிய துணைப் பெருந்தலைவர் திரு.ச.தீனதயாளன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்!...

#ranipet #tamilnadunews #tamilnews #breakingnews

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *