Wednesday, October 16
Breaking News:
Breaking News:
50,000 விதை பந்துகள் விதைக்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது

50,000 விதை பந்துகள் விதைக்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது

வந்தவாசி வெண்குன்றம் மலைப்பகுதியில் ஆர் சி எம் உயர்நிலைப்பள்ளி மற்றும் பாரத் சாரண  இயக்கம் மற்றும் வந்தே இரத்ததான குழு தமிழ் செம்மொழி மன்றம் இணைந்து நடத்தும் 50,000 விதை பந்துகள் விதைக்கும் மாபெரும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. தா. பன்னீர்செல்வம் ஆ.சி.எம். பள்ளி தாளாளர் தலைமை தாங்கினார்.பெ. செல்வராஜ் வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம். எஸ். தரணி வேந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், மாவட்ட கல்வி அலுவலர் காஞ்சிபுரம் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். தலைமை ஆசிரியர் வி.எல்.ராஜன், வந்தவாசி  வட்டாட்சியர் பொன்னுசாமி, வட்டார மருத்துவ அலுவலர் ஆனந்தன்,  நகர மன்ற தலைவர் எச். ஜலால், நகர செயலாளர் தயாளன், நகர மன்ற உறுப்பினர்கள் நாகூர் மீரான், அன்பரசு, ஜெகரா சித்தி , நகர மன்றத் துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், பலரும் கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *