Wednesday, October 16
Breaking News:
Breaking News:
உத்தமநல்லூர்  கிராமத்தில் நியாய விலைக் கடை திறப்பு விழா,

உத்தமநல்லூர் கிராமத்தில் நியாய விலைக் கடை திறப்பு விழா,

உத்தமநல்லூர்  கிராமத்தில் நியாய விலைக் கடை திறப்பு விழா


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  உத்தமநல்லூர், கிராமத்தில் நீண்ட நாட்களாக நியாய விலை கடை அமைத்து தர வேண்டும் என சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்தனர் கோரிக்கையின் பேரில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது


இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் இவர்கள் கலந்து கொண்டு புதியதாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து

 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா திருவருள் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்   இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அனந்தமங்கலம் சுப்பிரமணியம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஆனூர் பக்தவச்சலம் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்வந்த் ராவ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *