Wednesday, October 16
Breaking News:
Breaking News:
காதலால் ஏற்பட்ட விபரீதம்!திருநெல்வேலியில், பட்டப்பகலில் இளம்பெண்  படுகொலை!

காதலால் ஏற்பட்ட விபரீதம்!திருநெல்வேலியில், பட்டப்பகலில் இளம்பெண் படுகொலை!

திருநெல்வேலி,அக்.2:-நதிருநெல்வேலி பேட்டையை அடுத்துள்ள  ஊர், "திருப்பணி கரிசல்குளம்" ஆகும். இந்த  கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகள் சந்தியா (வயது.18). இவர், திருநெல்வேலி டவுண்,  கீழ ரத வீதியில் உள்ள பேன்சி கடையில், சேல்ஸ் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், இன்று (அக்டோபர்.2)  பிற்பகலில், கடையில் இருந்து, அருகில் குடோனுக்கு, சரக்கு எடுக்கச்                          சென்றார். அப்போது, காதல் தகராறு காரணமாக, இவர் கழுத்து அறுக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக, நெல்லை டவுண்  போலீசார்?வழக்குப்பதிவு செய்து, விசாரணை, நடத்தி வருகின்றனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *