Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருக்கோவிலூர் அருகே குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 80 அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அம்பேத்கர் பதிப்பகம் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சால்வை அணிவித்து கௌரவிப்பு

திருக்கோவிலூர் அருகே குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 80 அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அம்பேத்கர் பதிப்பகம் அறக்கட்டளை சார்பில் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சால்வை அணிவித்து கௌரவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 80 பேர் குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் 20 மாணவர்கள் முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினார்கள் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அம்பேத்கர் படிப்பகம் விளந்தை அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் இன்று மாணவ மாணவியர் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பேனாக்கள் வழங்கியும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள், இதில் அறக்கட்டளை விளந்தை நிர்வாக இயக்குனர் M.சீனுவாசன் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர் V.அர்ஜுனன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் M.முருகன் தலைமையில் M,சஞ்சீவிகுமார்,E.குமார் S.சுரேஷ் முன்னிலையில் R.அருண்,D.அசோக் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள். மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். திருக்கோவிலூர் தாலுகா செய்தியாளர் விக்னேஷ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *