Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலியில் நடைபெற்ற, தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்! மகளிர் தொண்டர் அணி மாநில இணைச்செயலாளர் பங்கேற்பு!

திருநெல்வேலியில் நடைபெற்ற, தி.மு.க. மகளிர் அணி ஆலோசனை கூட்டம்! மகளிர் தொண்டர் அணி மாநில இணைச்செயலாளர் பங்கேற்பு!

திருநெல்வேலி,அக்.6:- அடுத்த ஆண்டு (2024) மத்தியில் நடைபெறவுள்ள, நாடாளுமன்ற தேர்தலை அடிப்படையாக கொண்டு, நெல்லை மேலப்பாளையம் குறிச்சி, தெற்கு புறவழிச்சாலை சந்திப்பில் அமைந்துள்ள, மத்திய மாவட்ட  தி.மு.க. அலுவலகத்தில், திருநெல்வேலி  மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர்  தொண்டர்  அணி ஆலோசனை கூட்டம், இன்று (அக்டோபர்.6) காலையில், நடைபெற்றது. திருநெல்வேலி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சருமான டி.பி.எம்.மைதீன்கான் தலைமை வகித்தார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளரும், நாடாளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பினருமான விஜிலா சத்யானந்த், நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் கிரிஜா குமார், மாவட்ட மகளிர் தொண்டர் அணி  அமைப்பாளர் அனிதா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகேசுவரி,  மாநகர மகளிர் அமைப்பாளர்  சவுந்தரம் ராஜேசுவரி, நெல்லை மாநகராட்சி  முன்னாள் கவுன்சிலர் ரேவதி அசோக்,நிர்வாகிகள்  அமுதா, தேவிகா, ஜெனி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு, தங்களுடைய கருத்துக்களை பதிவு  செய்தனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *