Wednesday, October 16
Breaking News:
Breaking News:
வசூல் வேட்டையில் ஈடுபடும் அணைக்கட்டு ஜி 10 காவல் நிலைய காவலர்கள்

வசூல் வேட்டையில் ஈடுபடும் அணைக்கட்டு ஜி 10 காவல் நிலைய காவலர்கள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அணைக்கட்டு ஜி 10 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பாலூர் அரசு மதுபான கடை இயங்கி  வருகிறது அப்பகுதியை சார்ந்த  40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து  மது பிரியர்கள் மது வாங்கி செல்வது வழக்கம்  இந்த நிலையில் அணைக்கட்டு ஜி 10 காவல் நிலைய துணை ஆய்வாளர் தேவதாஸ் தலமையிலான குழு  மதுபான கடை வாசலில் நின்று கொண்டு  மது வாங்கிக் கொண்டு வெளியே வரும் நபர்களை  பிடித்து பெட்டி கேஸ்  போடுவதும்  அவர்களிடம்  பணத்தை பெற்றுக்கொண்டு  விட்டுவிடுவதும்  வாடிக்கையாக உள்ளது இதனால் பாலூர் மதுபான கடையில் மது வாங்க வரும் மது பிரியர்கள்  சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்      மது வாங்கிக் கொண்டு வெளியே வரும் நபர்களை பிடிப்பதும்  அவர்கள் மீது வழக்கு போடுவதும்  வழக்கை சரி செய்ய அவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதும்  அன்றாட நிகழ்வாக நடந்து கொண்டிருக்கிறது  அரசு அங்கீகாரம் பெற்ற மதுபான கடை வாசலில் காவல் நிலைய காவலர்கள் நின்று கொண்டு  அவர்களை விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம் பணம் கொடுக்க மறுக்கும் நபர்கள் மீது  வழக்கு போடுவதும் எந்த விதத்தில் நியாயம்  இதை காவல்  உயர் அதிகாரிகள் கண்டு கொள்வார்களா  என்று பொதுமக்கள்  கோரிக்கை வைத்துள்ளனர்  அரசு மதுபான கடையிலேயே இப்படி வசூல் வேட்டையில் இறங்கி உள்ளது  காவல்துறையின் மேல் உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா  பொதுமக்கள் பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *