Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்,பெருந்தலைவர் காமராஜரின், 48-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்,பெருந்தலைவர் காமராஜரின், 48-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

திருநெல்வேலி,அக்.2:- இந்திய சுதந்திர போராட்ட வீரரும்,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான "பெருந்தலைவர்" காமராஜரின், 48-வது "நினைவு" தினம் இன்று (அக்டோபர்.2) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு, திருநெல்வேலி சந்திப்பு, ரயில் நிலையம் முன்பாக நிறுவப்பட்டுள்ள, பெருந்தலைவர் காமராஜரின், திருவுருவச் சிலைக்கு 

"தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்" சார்பாக, அதன் திருநெல்வேலி

 மாவட்ட தலைவர் கண்மணிமாவீரன், தலைமையில், 

மாநில துணை பொதுச்செயலாளர்  நெல்லையப்பன் முன்னிலையில், மலர் தூவியும், மலர் மாலை அணிவித்தும்,  "மரியாதை" செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில்,கட்சியின் தலைமை செயலாளர் "கல்குறிச்சி" சேகர், தொழிற்சங்கச் செயலாளர் மகேந்திரன், நெல்லை

மேற்கு மாவட்ட செயலாளர் நாகராஜ் சோழன்,

மாநகர செயலாளர் துரைப்பாண்டியன், மாநகர இணை செயலாளர்கள் சின்னத்துரை, ரவீந்திரன், விவசாயிஅணி தலைவர் முருகன், இளைஞர் அணி செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர் சங்கர், தலைவர் முத்துவேல், ஆரோக்கிய சிங்கராயன், மகளிர் அணி நிர்வாகிகள் கண்மணி லலிதா ,

கண்மணி நிலா, உமா மகேசுவரி ஆகியோர்  உட்பட, பலரும் கலந்து கொண்டனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *