Wednesday, October 16
Breaking News:
Breaking News:
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பந்தலூர் பகுதியில் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பந்தலூர் பகுதியில் கரடியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது

அக்டோபர் 12. 

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உப்பட்டி பெருங்கரை பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து கரடி நடமாட்டம் இருந்ததை தொடர்ந்து நெல்லியாளம் நகர கழக செயலாளர் திரு.மு.சேகர் அவர்களும் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் திரு எஸ் காசிலிங்கம் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு இரா.முரளிதரன் மற்றும் வார்டு செயலாளர் ஆகியோர் கோரிக்கை வைத்ததின் பேரில்  உடனடியாக நடவடிக்கை எடுக்க வனதுறை அதிகாரிகள் கரடியை பிடிக்க இன்றைய தினம் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.எஸ். காசிலிங்கம். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு இரா.முரளிதரன்.மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் திரு. ஆசைத்தம்பி.மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் திரு.விஜய். நகர்மன்ற துணை தலைவர் திரு.நாகராஜ்.திரு மஞ்சு திரு அபி மற்றும் பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


டாக்ஸ் ஆப் இந்தியா நியூஸ் நீலகிரி மாவட்ட செய்தியாளர் ஆறுமுகம் என்கிற நாகராஜ்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *