Wednesday, October 16
Breaking News:
Breaking News:
மின்னல் தாக்கியதில் 23 செம்மறியாடுகள் பலி.

மின்னல் தாக்கியதில் 23 செம்மறியாடுகள் பலி.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் ஊராட்சி ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சாமிநாதன். இவர் விவசாயம் பார்த்துக் கொண்டு, 23 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.


இந்நிலையில் இன்று இவரது ஊரின் அருகே உள்ள மாணிக்கபுரத்தில் சாமிநாதன் மகள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்துள்ளார். மதிய நேரத்தில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய துவங்கியவுடன் அவரது மகள் வீட்டிற்கு சென்று வீட்டின் வெளியே இருந்த பொருட்கள், துணிகளை எடுத்து வைக்க சென்றுள்ளார்.


மேச்சலில் இருந்த  ஆடுகள் மழைக்காக

அருகில் உள்ள வேப்பமரத்து அடியில்  ஓரமாக ஒதுக்கின. அப்போது மின்னல் தாக்கியதில் 23 ஆடுகளும் சம்பவ இடத்திலே பலியாகின. சம்பவம் குறித்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மோகன்ராஜ் நேரில் ஆய்வு செய்தார்.  மாயனூர் கால்நடை மருத்துவர் ஜெகதீசன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து விவசாய இடத்திலேயே புதைத்தனர்.


சாமியப்பனின் மகள் சம்பவ இடத்தில் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.


 இச்சம்பவம் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *