Wednesday, October 16
Breaking News:
Breaking News:
திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில், பேரறிஞர் அண்ணாவின், 115-வது ஆண்டு பிறந்த தின விழா

திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில், பேரறிஞர் அண்ணாவின், 115-வது ஆண்டு பிறந்த தின விழா

பேரறிஞர் அண்ணாவின், 115-வது ஆண்டு பிறந்த தின விழா! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு! திருநெல்வேலி, செப்டம்பர்.15:-தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின், 115- வது பிறந்த தினவிழா, இன்று (செப்டம்பர்.15) தமிழகமெங்கும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரத்தில், திருநெல்வேலி மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், நாடாளுமன்ற மேலவை முன்னாள் உறுப்பினருமான பி.சவுந்தர ராஜன் தலைமையில், அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு,  மலர் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

ராதாபுரம் கிழக்கு ஒன்றிய  அ.தி.மு.க. செயலாளர் கே.பி.கே. செல்வராஜ் ,ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் எம்.அந்தோணி அமலராஜா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணைத்தலைவர் என்.பாலரிச்ர்ட்,  பரமேஸ்வரபுரம்  பகுதி செயலாளர் மின்னல், முன்னாள் ஊராட்சி  செயலாளர் சமூகை சந்திரன், மாவட்ட பிரதிநிதி மிட்டாதார்குளம் வசிகரன், தகவல் தொழில்நுட்பத்துறை துணைச்செயலாளர்  எஸ்.சுப்புராஜ், பகுதி கழகச் செயலாளர்கள்  மாலைப் பாண்டியன், ராமர், மைக்கேல் இளங்கோ, துரைராஜ், திராவிடமணி, பச்சைமால், மற்றும் பெட்டைகுளம் கணேசன் இருக்கன்துறை  ஊராட்சி  செயலாளர் தகவல் தொழில்நுட்பத்துறை எஸ். குமரேசன், ராதாபுரம் மேற்கு ஒன்றிய மாணவர் அணி  துணை செயலாளர் வினேஸ்ராஜா, செல்வன், லிங்கதுரை, கோட்டை கதிரேசன் மற்றும் முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *