Wednesday, October 16
Breaking News:
Breaking News:
தீபாவளி 2023-30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.

தீபாவளி 2023-30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.

இந்தியாவின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் 1935 முதல் தொடங்கப்பட்டு 88 ஆண்டுகளாக தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலும் தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக விழா காலங்களில் 30% வரை அரசு சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது.


இந்தாண்டு தீபாவளி 2023-ல் புதிய வடிவமைப்புகளில் அசல் பட்டுடன் கூடிய சேலம்!: பட்டுப் புடவைகள் புதிய வடிவமைப்புடன் கூடிய மென் பட்டு புடவைகள் ஏராளமாக குவிந்துள்ளன. மேலும் கோவை, மதுரை, பரமக்குடி, திருச்சி மற்றும் சேலம் பகுதிகளில் தயாராகும் அனைத்து இரசு காட்டன் புடவைகள் புதிய வடிவமைப்பிலும் ஆர்கானிக் மற்றும் களம்காரி காட்டன் புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி இரகங்களான குல்ட் மெந்தைகள், டேபுள்

மேட், ஸ்கிரின் துணிகள், ஒரிஜினல் இலவம் பஞ்சினால் ஆன மெத்தைகள்

தலையணைகள், பிரிண்டட் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கைத்தறி இரகங்களுக்கு 3000 சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அளைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட அன்புடன் கோ-ஆப்டெக்ஸ் கேட்டுக்கொள்கிறது.

விற்பனை இலக்கு


தீபாவளி 2023 பண்டிகைக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள 1 விற்பனை நிலையத்திற்கு ரூ.50.00 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது


2023-30% சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க வின் மிகப்பெரிய கைத்தறி நிறுவனமாக 1935 முதல் தொடங்கப்பட்டு 88 ஆண்டு ளர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையி ழங்குவதற்காக விழா காலங்களில் 30% வரை இந்தாண்டு தீபாவளி 2023-ல் புதி பட்டுப் புடவைகள் புதிய வடிவன குவிந்துள்ளன. 


கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300/- முதல் ரூ.3000/- வரை இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும், 11 மாத சந்தா தொகையை அங்கத்தினர் செலுத்தினால் 12வது மாத சந்தா தொகையினை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி கூடுதல் பலன் தருவதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இத்திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர்


தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடியாக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வட்டியில்லா கடன் வசதியில் 300 வரையிலான தள்ளுபடி வழங்குகிறது.


தீபாவளி 2023 சிறப்பு தள்ளுபடி துவக்க விழாவினை கோ-ஆப்டெக்ஸ் கரூம் விற்பனை நிலையத்தில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவக்கி வைத்தார்கள். இவ்விழாவில் முதல் விற்பனையை .ஜெயலட்சுமி பெற்றுக்கொண்டார். கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் .காங்கேயவேலு, துணை மண்டல மேலாளர சுப்ரமணியன், கரூர் விற்பனை நிலைய மேலாளர் (பொறுப்பு) கதிர்வேல் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Tags:

Comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *